Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 

ஜுலை 25, 2023 01:31

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் வட்டாரத்தில், தொடக்க நிலை 4, 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

எலச்சிபாளையம் வட்டார வளமையம் சார்பாக, 4,5 ஆம் வகுப்புகளுக்கு பயிற்றுவிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு தொடர் பணித்திறன் மேம்பாடு, உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த பயிற்சியானது வேலகவுண்டம்பட்டி, பெரியமணலி, மாணிக்கம்பாளையம், எலச்சிபாளையம் ஆகிய அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. 

பயிற்சியை மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சந்தோசம், வட்டார கல்வி அலுவலர்கள் ராஜவேல், வெங்கடாசலம் வட்டாரவள மைய மேற்பார்வையாளர் மகாலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் சுதா, செந்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டாரத்திற்கு உட்பட்ட 71 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்